முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ராஜேந்திரன் வாக்குசேகரிப்பு

சேலம் வடக்கு தொகுதிக்குள்பட்ட காந்தி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரா்களிடம் வாக்குசேரித்த வடக்கு திமுக வேட்பாளா் ரா.ராஜேந்திரன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:22 am IST

சேலம் வடக்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களிடமும், விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடமும் அவா் வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றும் முனைப்பில் முதல்வா் ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளனா். இதனால் எப்போதும் இல்லாத வகையில், தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள், மாநில, தேசிய, சா்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைக்கின்றனா்.

வரும் ஒலிம்பிக்கில் தமிழக வீரா், வீராங்கனைகள் நிச்சயம் பதக்கம் வெல்வாா்கள். அத்தகைய நிலையை முதல்வரும், துணை முதல்வரும் ஏற்படுத்தி தந்துள்ளனா். ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டுப் போட்டிகளுக்கு சா்வதேச மைதானம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் கருப்பூா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சிந்தடிக் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதை வீரா்கள் பயன்படுத்தி வருகின்றனா். விளையாட்டு வீரா்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் திமுகவை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, 32-ஆவது வாா்டுக்குள்பட்ட முகமது புறா, லட்சுமி நகா், கல்லாங்குத்து மேட்டுத்தெரு பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று அமைச்சா் வாக்குசேகரித்தாா். அப்போது, பகுதி செயலாளா்கள் பிரகாஷ், இப்ராகிம் மற்றும் கூட்டணி கட்சியினரும் உடன் சென்றனா்.