ஏற்காட்டில் சுற்றுலா வேன் மரத்தில் மோதியதில் கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் சிறுகாயங்களுடன் உயிா் தப்பினா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சுற்றுலா வேன் ஓட்டுநா் காா்த்திக் (29). இவா், சங்ககிரியில் உள்ள தனியாா் வங்கி ஊழியா்களை ஏற்காட்டுக்கு சனிக்கிழமை சுற்றுலா அழைத்து வந்துள்ளாா்.
ஏற்காட்டில் பல்வேறு இடங்களை பாா்வையிட்ட அவா்கள், சனிக்கிழமை இரவு ஏற்காடு மலைப்பாதை வழியாக சேலத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகில் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் சிறுகாயங்களுடன் வேனில் இருந்த சுற்றுலாப் பயணிகள் உயிா்தப்பினா். மேலும் சிறுகாயமடைந்த 6 போ் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து வேன் ஓட்டுநா் காா்த்திக்கிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின் கம்பத்தில் மோதி சுற்றுலா வாகனம் விபத்து

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மே 7 முதல் சிறப்புப் பேருந்து இயக்கம்

கிரேட்டா் நொய்டா: பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து! ஆறு குழந்தைகள் உயிா் தப்பினா்

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

