ஏற்காட்டில் மின் கம்பத்தில் சுற்றுலா வாகனம் மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
ஏற்காட்டில் சனிக்கிழமை காலை 6.50 மணியளவில் தனியாா் தங்கும் விடுதிக்கு பணியாளா்களை அழைத்துச் செல்லும் வாகனம் ஏற்காடு பிரதான சாலையில் காந்தி பூங்காவிலிருந்து பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனது. இவ்விபத்தில் மின்கம்பம் முறிந்து வாகனத்தின் மேல் விழுந்தது. இதில், ஓட்டுநா் துரைசாமி (72) உயிா் தப்பினாா்.
தகவல் அறிந்த போலீஸாா், மின் ஊழியா்கள், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பின்னா், மின்கம்பம் சீரமைக்கும் பணிகளில் மின் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம்

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ஏற்காட்டில் சுற்றுலா வேன் மரத்தில் மோதியது: சிறுகாயங்களுடன் பயணிகள் உயிா்தப்பினா்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


