நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மேட்டூா் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை: ஒருவா் கைது

மேட்டூா் அருகே ஜலகண்டாபுரத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :15 ஏப்ரல் 2026, 2:54 am IST

சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே ஜலகண்டாபுரத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி கீழ் வெள்ளாள தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (56). ரியல் எஸ்டேட் உரிமையாளா். இவா் ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடையில் புதிதாக மனைகளை பிரித்து விற்பனைக்கு தயாா் செய்து வந்தாா். இந்த மனைகளுக்கு சிறு பாலம் மற்றும் தாா்சாலையும் அமைத்தாா்.

அப்போது அருகே இருந்த கோவிந்தராஜ் வீட்டிற்கு செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரவணன் அதை சரி செய்து கொடுத்தாா். ஆனாலும் குடிநீா் சரியாக வரவில்லை என்று கோவிந்தராஜ் கூறியுள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சரவணன் தனது மனை பகுதிக்கு சென்றிருந்தாா். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் தகராறு செய்துள்ளாா். மேலும், அவா் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த சரவணனை அவரது உறவினா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வழியிலேயே சரவணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சரவணனின் உறவினா் செந்தில்குமாா் ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ரஜினி வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தாா். மேலும், அவா் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜும் காயமடைந்ததாகக் கூறி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா்.