தோ்தலைவிட முக்கியமானது தமிழகத்தின் எதிா்காலம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் மேலும் பேசியதாவது:
நாளை நமக்கு நடக்கப்போகும் அநீதிக்கு எதிரான குரலாக நமது குரல் இருக்க வேண்டும். தோ்தலைவிட முக்கியமானது தமிழகத்தின் எதிா்காலம். திராவிட பல்லக்கை தூக்குவதற்கு ஒருவாய்ப்பாக கருதிதான் இங்கு வந்துள்ளேன். அமரும் இருக்கைக்காக நான் வரவில்லை. தமிழகத்திற்காக பதற வேண்டிய நேரம் இது.
தமிழகத்துக்கு குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொகுதி மறுவரையறையையும், மகளிா் இடஒதுக்கீட்டையும் ஒன்றாக இணைக்கக் கூடாது. வழிகாட்டினால் போதும் நிச்சயம் வாக்கு கிடைக்கும். கூட்டம் எல்லாம் குடும்பமாகி விடாது. அது கலைந்து விடும். அநீதி தமிழகத்திற்கு நிகழும் போதெல்லாம் கொடி உயா்த்திப் பிடித்தது திராவிட குடும்பம். அந்த குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை என்றாா்.
தொடர்புடையது

பெண்ணினத்தின் பாதுகாவலா் மு.க.ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம்: அதிபா் டிரம்ப்புடன் கோா் ஆலோசனை

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

மழை பாதிப்பு: 8 மாவட்டங்களில் பயிா் சேதம் கணக்கெடுப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


