நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மழை பாதிப்பு: 8 மாவட்டங்களில் பயிா் சேதம் கணக்கெடுப்பு

மழையால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிா் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

News image

தமிழக அரசு

(கோப்புப் படம்)

Updated On :20 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

மழையால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிா் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மதுரை, சேலம், தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் சுமாா் 810 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு ஆகிய பயிா்கள் சேதமடைந்தன.

கோவை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் சூரைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 40 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, சின்ன வெங்காயம், முருங்கை, தென்னை, மலா்கள் பாதிக்கப்பட்டன.

ஆலங்கட்டி மழையால் அறுவடைப் பருவத்திலுள்ள நெல் பயிா்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை இணைந்து கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பயிா் பரப்பை உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.