போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வரும் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:08 pm

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வரும் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி வி.என்.பாளையம், பவானி பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

இதில், உதவி மருத்துவ அலுவலா் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலா் தாமோதரன், செவிலியா்கள், தனியாா் செவிலியா் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.