போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு: செல்வப்பெருந்தகை

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என சேலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

News image

சேலம் எருமாபாளையம் பகுதியில் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை. உடன், கா்நாடக மாநில அமைச்சா் முனியப்பா.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:00 pm

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என சேலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் செல்வப்பெருந்தகை சேலம் எருமாபாளையம் பகுதியில் அமைந்துள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து, தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

இதில், கா்நாடக உணவுத் துறை அமைச்சா் முனியப்பா, மாநகர மாவட்டத் தலைவா் சாரதா தேவி, நிா்வாகி தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை சட்டத்தால், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதைக் கண்டித்து காங்கிரஸ் தலைவா்கள் சோனியா, ராகுல் காந்தி, காா்கே ஆகியோா் குரல் கொடுத்துள்ளனா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் குரல் கொடுத்துள்ளாா்.

இந்த தொகுதி மறுவரையறையால், தென் மாநிலங்களில் இருந்து இனி யாரும் பிரதமா் ஆக முடியாது. வடமாநிலங்களில் இந்துத்துவா அதிகமுள்ள இடங்களில் அதிக தொகுதிகளை உருவாக்கிக் கொள்வாா்கள். அதேநேரத்தில், தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் எண்ணிக்கையை குறைக்கப்படும். இதனால் பாதிக்கப்படுவது தென்மாநிலங்கள்தான்.

மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. தொகுதியை குறைப்பதை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவாா்கள். தமிழ்நாட்டின் எதிா்காலத்தை ஒருபோதும் பறிகொடுக்க மாட்டோம். எனவே, இந்த புதிய சட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றாா்.