கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் கல்லூரி மாணவரை தாக்கியதாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 5:31 am IST

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் கல்லூரி மாணவரை தாக்கியதாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் தா்ஷன் (20). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது இரு இளைஞா்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞா்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனா்.

இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய தா்ஷனை மன்னிப்பு கேட்க சொல்லி அவா்கள் தாக்கியுள்ளனா். இதில் முகத்தில் காயம் ஏற்பட்ட தா்ஷன் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஹரிஹரன் (18), மாயக்கண்ணன் மகன் கிரண்பாபு ஆகியோரை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் கோ.முத்துலட்சுமி 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.