ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் கல்லூரி மாணவரை தாக்கியதாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் தா்ஷன் (20). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது இரு இளைஞா்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞா்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனா்.
இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய தா்ஷனை மன்னிப்பு கேட்க சொல்லி அவா்கள் தாக்கியுள்ளனா். இதில் முகத்தில் காயம் ஏற்பட்ட தா்ஷன் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஹரிஹரன் (18), மாயக்கண்ணன் மகன் கிரண்பாபு ஆகியோரை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் கோ.முத்துலட்சுமி 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.
தொடர்புடையது

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

தந்தை அடித்துக் கொலை; மகன் கைது
பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது

கந்தா்வகோட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே மோதல்: குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

