மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தந்தையை உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:40 am

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தந்தையை உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், கீழிருப்பு கிராமத்தில் வசித்து வந்தவா் மணிகண்டன் (55) (படம்), குடிசைத் தொழிலாக வீட்டில் முருக்கு, மிக்சா் தயாா் செய்து வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் பிரகாஷ் உள்ளனா். வெளி நாட்டில் வேலை செய்து வந்த பிரகாஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் சொந்த ஊருக்கு வந்துவிட்டாா்.

மணிகண்டன் வியாபாரம் செய்த பணத்தை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாள்களுக்கு வீட்டிற்கு வர மாட்டாராம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வீட்டிற்கு வராத மணிகண்டன், வியாழக்கிழமை மது அருந்தி போதையில் வீட்டிற்கு வந்தாராம். அன்று இரவு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதை பாா்த்த மகன் பிரகாஷ், வீட்டில் கிடைந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை மணிகண்டனை கண் மூடித்தனமாக தாக்கினாராம். இதில், பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.