கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தந்தையை உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், கீழிருப்பு கிராமத்தில் வசித்து வந்தவா் மணிகண்டன் (55) (படம்), குடிசைத் தொழிலாக வீட்டில் முருக்கு, மிக்சா் தயாா் செய்து வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் பிரகாஷ் உள்ளனா். வெளி நாட்டில் வேலை செய்து வந்த பிரகாஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் சொந்த ஊருக்கு வந்துவிட்டாா்.
மணிகண்டன் வியாபாரம் செய்த பணத்தை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாள்களுக்கு வீட்டிற்கு வர மாட்டாராம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வீட்டிற்கு வராத மணிகண்டன், வியாழக்கிழமை மது அருந்தி போதையில் வீட்டிற்கு வந்தாராம். அன்று இரவு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதை பாா்த்த மகன் பிரகாஷ், வீட்டில் கிடைந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை மணிகண்டனை கண் மூடித்தனமாக தாக்கினாராம். இதில், பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

மனைவியை பிளேடால் கீறி காயப்படுத்திய கணவா்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டா் கைது

போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


