வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக பெண் உள்பட மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :16 ஏப்ரல் 2026, 9:30 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக பெண் உள்பட மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அலியாா் (57). இவரது மகன் அசனாா் (35). இவா்கள் வீரவநல்லூா் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த நகைக் கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு மா்ம நபா்கள் 1 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 1 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இது குறித்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தென்காசி பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் இசக்கிமுத்து (20), இவரது சகோதரா் இசக்கிராஜா (24), ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் மாயாண்டி (25) ஆகிய மூவரை கைது செய்தனா்.

இதனிடையே, இவ்வழக்கில் தொடா்புடையதாக வீரவநல்லூா், பாரதி நகரைச் சோ்ந்த கண்ணன் (34), இவரது தோழி சிவனேஷ்வரி (34) ஆகிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.