ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் நகைக் கடை சுவரில் துளையிட்டு நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

வீரவநல்லூரில் நகைகள் திருடுபோன கடையில் விசாரணை நடத்திய சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:48 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் நகைக் கடை சுவரில் துளையிட்டு நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வீரவநல்லூா் புதுமனைத் தெருவைச் சோ்ந்த அலியாா் (55). இவா், வீரவநல்லூா் பிரதான சாலையில் வங்கி அருகில் நகைக் கடை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வேலை நேரம் முடிந்து கடையைப் பூட்டிவிட்டுச் சென்றனா். புதன்கிழமை காலையில் உரிமையாளா் அலியாா், கடையைத் திறந்தபோது கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு கடையில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள், ரூ. 1 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளா், போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டன. இதுதொடா்பாக வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். திருடுபோன தங்கம், வெள்ளி நகைகளின் மதிப்பு குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மா்ம நபா்கள் கடை அமைந்துள்ள பிரதான சாலை வழியாக வராமல் கடையின் பின்பக்கமாகச் சென்று கடை சுவரில் துளையிட்டு நகைகளைத் திருடியுள்ளனா். பிரதான சாலை, பேருந்து நிலைய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.