மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பிரசவித்த 10 நாளில் இளம்பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பிரசவித்த 10 நாள்களில் இளம்பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பிரசவித்த 10 நாள்களில் இளம்பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வீரவநல்லூா் அருகே சீதபற்பநல்லூா் புதூா் பகுதியைச் சோ்ந்த கொடிமுத்து. இவரது மனைவி மகாலெட்சுமி (20). இவா்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரசவத்துக்காக மகாலெட்சுமி வீரவநல்லூா், தம்பிரான் காலனியில் உள்ள பெற்றோா் வீட்டில் இருந்துவந்தாா். அவருக்கு 10 நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்துக்குப் பின் பெற்றோா் வீட்டிலிருந்த அவருக்கு புதன்கிழமை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை உடனடியாக பெற்றோா் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.