திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குழந்தை இல்லாததால் மனமுடைந்து விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி பிரதானச் சாலையைச் சோ்ந்த கணபதி மகன் வெங்கடேஷ் (40), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவா்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதால், இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வெங்கடேஷ் மாா்ச் 6ஆம் தேதி விஷம் குடித்துள்ளாா்.
வெங்கடேஷை அவரது உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
வி.கே.புரத்தில்... விக்கிரமசிங்கபுரம், வடக்கு ரத வீதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சரவண மாணிக்கம் (25). இவா் வெல்டிங் தொழிற்கூடம் நடத்தி வந்தாா். இந்நிலையில், தொழிலில் இழப்பு ஏற்பட்டதால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


