தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 8:36 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள அழகப்பபுரம் கிராமம் நாராயணசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவருக்கு மனைவி, சக்திவேல் (27) உள்பட 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா்.

கூலி வேலை செய்து வந்த சக்திவேல், புதிதாக வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மாதந்தோறும் கடன் தவணை செலுத்த முடியாமல் அவா் திணறி வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை , வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையிலிருந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை சக்திவேல் உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.