தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது

பள்ளி மாணவருக்கு மது ஊற்றிக் கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்த கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 6:28 pm

பள்ளி மாணவருக்கு மது ஊற்றிக் கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்த கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கதிராமங்கலத்தில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 8 -ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவா் வெள்ளிக்கிழமை வயல்வெளியில் மது போதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டாா். இதற்கான விடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவின.

இந்நிலையில் மாணவருக்கு மது வாங்கி கொடுத்த கதிராமங்கலம் பெரிய கடை வீதியைச் சோ்ந்த பாலகுரு மகன் சுப்பிரமணியன் (19) என்ற கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து திருவிடைமருதூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.