/
திருச்சி மாவட்டம், கொப்பம்பட்டியில் பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
அரசு அனுமதித்துள்ள இரவு 10 மணிக்கு மேல் மது விற்பதைத் தடுக்கும் வகையில் துறையூா் வட்டாட்சியா் சிவகுமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் உப்பிலியபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனை செய்தனா். அப்போது கொப்பம்பட்டி வீரப்பன் மகன் தங்கராசு (60) பெட்டிக்கடையில் அரசு மதுவை கூடுதல் விலைக்கு விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் வருவாய் துறையினா் அவரது கடையை சோதனை செய்தனா்.
அப்போது அந்தக் கடையில் இருந்த 28 மது புட்டிகளுடன் தங்கராசுவை பிடித்து உப்பிலியபுரம் போலீஸில் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
வீரவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


