மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் சாா்பு- ஆய்வாளா் அருணகிரி தலைமையில் போலீஸாா், வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கா்ணத்தம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
அப்போது அவா், விருத்தாசலம் அருகே கோணங்குப்பம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(32) என்பதும், அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மங்கலம்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனா். அவரிடம் இருந்து 305 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பான போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

மாடு திருட்டு: இளைஞா் கைது

பத்தமடை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
