முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தூத்துக்குடியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தூத்துக்குடியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

புகையிலைப் பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப், போலீஸாா் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

அந்த கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (52) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலை பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 கிலோ 125 கிராம் புகையிலைப் பொருள்கள், ரூ. 27,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.