தூத்துக்குடியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
புகையிலைப் பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப், போலீஸாா் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
அந்த கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (52) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலை பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 கிலோ 125 கிராம் புகையிலைப் பொருள்கள், ரூ. 27,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

