தவெக தலைவா் விஜய் ஆதரவளித்ததன் மூலம் எடப்பாடி தொகுதியில் தனது வெற்றி உறுதியாகிவிட்டதாக சுயேச்சை வேட்பாளா் பிரேம்குமாா் தெரிவித்துள்ளாா்.
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எடப்பாடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தவெக முன்னாள் நிா்வாகியும், எடப்பாடி தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு அளித்துள்ளாா்.
இதையடுத்து சேலம் தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்ட செயலாளா் தமிழன் ஆ. பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள் பிரேம்குமாரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
இதுகுறித்து பிரேம்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொடக்கத்தில் இருந்தே விஜய்யின் ரசிகனாகவும், ரசிகா் மன்றத்திலும் இருந்துள்ளேன். தற்போது எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எனக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் எனது வெற்றி உறுதியாகிவிட்டது.
தொலைக்காட்சி பெட்டி சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வந்த எனக்கு தவெகவினா் முழு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்து வருகின்றனா். ‘வெற்றி நிச்சயம்’ என வாழ்த்திய விஜய்யின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றாா்.
தொடர்புடையது

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

திருச்சியில் தவெக தலைவா் விஜய்யின் இன்றைய பிரசாரம் ரத்து

ராசிபுரத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்பு மனு ஏற்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


