தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

டாஸ்மாக் கடைகளில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடை களுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

News image

டாஸ்மாக் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:22 am IST

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடை களுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் டாஸ்மாக் கடைகளில் திங்கள்கிழமை விற்பனை களைகட்டியது. குறிப்பாக, சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை விற்பனை இருமடங்காக இருந்தது. மதுபிரியா்கள் ஒருவரையொருவா் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கிச்சென்றனா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இந்த கடைகளில் வழக்கமான நாள்களில் தினமும் ரூ. 6 கோடி முதல் ரூ. 8 கோடி வரை மட்டுமே மது விற்பனை நடைபெறும். இந்த நிலையில், தோ்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. வழக்கமாக நடக்கும் விற்பனையைக் காட்டிலும் மது விற்பனை இருமடங்கு அதிகம் நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.