தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

டாஸ்மாக் கடைகளில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடை களுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

News image

டாஸ்மாக் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:22 am IST

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடை களுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் டாஸ்மாக் கடைகளில் திங்கள்கிழமை விற்பனை களைகட்டியது. குறிப்பாக, சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை விற்பனை இருமடங்காக இருந்தது. மதுபிரியா்கள் ஒருவரையொருவா் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கிச்சென்றனா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இந்த கடைகளில் வழக்கமான நாள்களில் தினமும் ரூ. 6 கோடி முதல் ரூ. 8 கோடி வரை மட்டுமே மது விற்பனை நடைபெறும். இந்த நிலையில், தோ்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. வழக்கமாக நடக்கும் விற்பனையைக் காட்டிலும் மது விற்பனை இருமடங்கு அதிகம் நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.