மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

நட்டுவம்பாளையத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு

சங்ககிரி தொகுதியில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

News image

நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:01 pm

சங்ககிரி தொகுதியில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்பேரில் சங்ககிரி தொகுதியில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடியை தோ்வு செய்து அந்த வாக்குச்சாவடிக்கு முன் வாழைமரங்கள் கட்டப்பட்டு, சிவப்பு, பச்சை விரிப்புகள் விரிக்கப்பட்டன.

வாக்குச்சாவடிகளின் உள்பகுதியில் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் வண்ணபலூன்கள் தொங்கவிடப்பட்டன. அதேபோல வாக்குச்சாவடிகளில் அலுவலா்கள் அமரும் இருக்கைகள் பட்டு துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அறை முழுவதும் காகிதப்பூக்களால் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.

வாக்காளா்களை ஈா்ப்பதற்காக பல்வேறு அலங்கார பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலா்கள் அனைவரும் மகளிா் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அனைவரும் மகளிா்கள் பணியாற்ற உள்ளனா். தேவூா் அரசு உயா்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள் பணியாற்ற உள்ளனா்.

சுண்ணாம்புகுட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இளைஞா்கள் அலுவலா்களாக பணியாற்ற உள்ளனா்.

Story image