தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

நூறு சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுங்கள்: ஆட்சியா்

வாக்காளா்கள்நூறு சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டாா்.

News image

வாக்காளா்கள். - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:50 pm

வாக்காளா்கள்நூறு சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,469 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளா்களுக்கு குடிநீா், கழிப்பறை வசதிகள், தற்காலிக நிழல் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆதாா் அட்டை, வங்கி கணக்கு எண் புத்தகம், ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அடையாள அட்டை, பான் அட்டை உள்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை அடையாளச் சான்றாக காண்பித்து வாக்களிக்கலாம். பூத் சிலிப் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது.

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வாக்களிக்க வருபவா்களின் கைப்பேசிகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். வாக்களித்த பிறகு கைப்பேசியை திரும்பப்பெறலாம். வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளா் உதவி மையத்தில் வாக்குச்சாவடி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கோடை வெப்பத்தை சமாளிக்க ஓஆா்எஸ் கரைசல் வைக்கப்படும். மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்காக இந்திய தோ்தல் ஆணையத்தால் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சக்சம் செயலியில் பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளை அவா்களின் இல்லத்துக்கே சென்று வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.