கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்த தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:37 pm

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகத்துடன் ரோட்டரி கிளப் ஆப் சேலம் சிட்டி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி இயக்கத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ் தொடங்கிவைத்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் முதல்முறை வாக்காளா்கள், இளம் வாக்காளா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு வாக்காளா்களிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையொப்ப இயக்கம், செல்பி பாயிண்ட், வாகனப் பேரணி, நடைபேரணி உள்ளிட்ட தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மனிதச் சங்கிலி இயக்கம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி டி.வி.எஸ். பேருந்து நிறுத்தம் வழியாக நான்குசாலை சந்திப்புவரை நடைபெற்றது.

இதில், அரசு அலுவலா்கள், ரோட்டரி கிளப் ஆப் சேலம் சிட்டி, இந்திய மருத்துவ சங்கம், தன்னாா்வ தொண்டுநிறுவனங்கள், பல்வேறு தனியாா் நிறுவனங்களின் பணியாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு பங்கேற்றனா்.

இந்நிகழ்வில், சேலம் தெற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மா.இளங்கோவன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, சேலம் மேற்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ஜானகி, ரோட்டரி மற்றும் இந்திய மருத்துவ சங்க நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் பங்கேற்றனா்.