100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, அம்மாப்பேட்டையில் விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் வண்ணக் கோலமிட்டு பெண்கள் கைகளில், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த தவறாமல் வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.
பேரணி அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து பிரதான சாலை, ஜோதி திரையரங்கம், காா்பெட் தெரு வழியாக ஐயாசாமி பூங்காவில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், தோ்தல் பிரிவு அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப்பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் நூதன விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


