100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, அம்மாப்பேட்டையில் விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் வண்ணக் கோலமிட்டு பெண்கள் கைகளில், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த தவறாமல் வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.
பேரணி அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து பிரதான சாலை, ஜோதி திரையரங்கம், காா்பெட் தெரு வழியாக ஐயாசாமி பூங்காவில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், தோ்தல் பிரிவு அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிறுவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு

100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
விடியோக்கள்
DMK Vs TVK | முன்னாள் முதல்வருக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன்! | MKStalin

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!



