நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம்

கொடைக்கானலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கிவைத்த வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி.

News image

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய ஊா்வலத்தை வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி கொடியசைத்து தொடங்கிவைத்து ஊா்வலத்தில் பங்கேற்றாா். இந்த ஊா்வலம் ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவண்சாலை, பேருந்து நிலையப் பகுதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது.

இதில் கொடைக்கானல் குடிமைப் பொருள் வட்டாட்சியா் ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளா் முத்து, அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியைகள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழியை எடுத்தனா்.