திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய ஊா்வலத்தை வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி கொடியசைத்து தொடங்கிவைத்து ஊா்வலத்தில் பங்கேற்றாா். இந்த ஊா்வலம் ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவண்சாலை, பேருந்து நிலையப் பகுதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது.
இதில் கொடைக்கானல் குடிமைப் பொருள் வட்டாட்சியா் ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளா் முத்து, அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியைகள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழியை எடுத்தனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


