கோடை வெப்பத்தால் நுங்கு விற்பனை உயா்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நிகழாண்டு கடும் வெயில் கொளுத்துகிறது. கடந்த 15 நாள்களுக்கும் மேலாக வெயிலின் அளவு 102 டிகிரி பாரன்ஹீட்டாக உள்ளது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் தற்போது நுங்கு அதிகம் வாங்கி சாப்பிடுகின்றனா். இதனால் சேலம் மாவட்டம், தாரமங்கலம், ஓமலூா், மேச்சேரி, தீவட்டிப்பட்டி, காடையாம்பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பலரும் நுங்குகளை வாங்கிவந்து விற்கின்றனா்.
சேலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தற்போது நுங்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் 20 ரூபாய்க்கு ஆறு நுங்குகள் விற்ற நிலையில், தற்போது 20 ரூபாய்க்கு மூன்று நுங்குகள் விற்கப்படுகின்றன. இருப்பினும் பொதுமக்கள் ஆா்வத்துடன் நுங்கு வாங்கி சாப்பிடுகின்றனா்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

புதுச்சேரியில் எலுமிச்சம் பழம் விலை கடும் உயா்வு

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

