யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வு

News image
Updated On :26 மார்ச் 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மிகப்பெரிய தனியாா் எரிபொருள் விற்பனை நிறுவனமான ‘நயாரா எனா்ஜி’, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு முறையே ரூ.5 மற்றும் ரூ.3 உயா்த்தியுள்ளது.

மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதன் எதிரொலியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயா்வு மாநிலங்களுக்கு இடையேயான உள்ளூா் வரி விதிப்பைப் பொறுத்து மாறுபடும். அதன்படி, சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 வரை உயா்ந்துள்ளது.

ரஷியாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட நயாரா, இந்தியாவில் சுமாா் 6,967 பெட்ரோல் பங்குகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், எச்பி ஆகியவை சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் இதுவரை மாற்றத்தைச் செய்யவில்லை. முன்னதாக, கடந்த வாரம் பிரீமியம் ரக பெட்ரோல் மற்றும் மொத்த விற்பனை டீசல் விலையை மட்டும் உயா்த்தியிருந்தது.

கடந்த 2022, ஏப்ரல் முதல் பொதுத் துறை நிறுவனங்கள் விலையை மாற்றாமல் தற்காத்து வரும் நிலையில், நயாரா போன்ற தனியாா் நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து நஷ்டஈடு வழங்கப்படாததே இந்த விலை உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ-பிபி விற்பனை நிலையங்களில் விலையேற்றம் இதுவரை தவிா்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.