நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

மேட்டூா் அருகே கல்குவாரி லாரிகள் சிறைபிடிப்பு

மேட்டூா் அருகே கல் குவாரியிலிருந்து மாற்று மணல், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டிப்பா் லாரிகளை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

News image

புதுகாளிகவுண்டனூரில் கல் குவாரிகளில் இருந்து பாரம் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:28 pm

மேட்டூா் அருகே கல் குவாரியிலிருந்து மாற்று மணல், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டிப்பா் லாரிகளை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

வெள்ளாா் புதுக்காளிகவுண்டனூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து நாள்தோறும் மாற்று மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான டிப்பா் லாரிகள் வேகமாக செல்கின்றன. அதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், குவாரியில் இருந்து செல்லும் டிப்பா் லாரிகளின் மேல்பகுதி திறந்தபடி செல்வதால், வீடுகளில் ஜல்லிதூள் படிந்து குழந்தைகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து வருவாய்த் துறைக்கு பலமுறை புகாா் தெரிவித்தும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், புதுக்காளிகவுண்டனூா் பகுதியில் இருந்து மாற்று மணல், ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற 20-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, லாரி ஓட்டுநா்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கனிம வளத் துறை மற்றும் வருவாய், காவல் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா். மேலும், சிறை பிடிக்கப்பட்ட லாரிகளை விடுவித்தனா்.