ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஏற்காட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த புதுச்சேரி முத்தையால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியை சோ்ந்த கண்ணன் மகள் லலிதா (52). ஏற்காடு பக்கோட பாயிண்ட் செல்லும் வழியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு லலிதாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரது மகன் பிரபாகரன், ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு லலிதாவை கொண்டு சென்றாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதை உறுதிபடுத்தினா்.
உடல்நலக் குறைவால் லலிதா மருந்து எடுத்து வந்ததாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏற்காட்டில் இருவா் கொலை வழக்கில் இளைஞா்கள் 2 பேருக்கு ஆயுள்தண்டனை

ஏற்காட்டில் தேனி கொட்டியதில் பெண் உயிரிழப்பு

ஏற்காட்டில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


