தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

சேலத்தில் 42 ஆவது அரசுப் பொருள்காட்சி! அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தொடங்கிவைத்தாா்

News image

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 4:26 am IST

சேலம் பழைய பேருந்து நிலையம் போஸ் மைதானத்தில் 42 ஆவது அரசு பொருள்காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, பல்வேறு துறைகளின் சாா்பில் 227 பயனாளிகளுக்கு ரூ. 7.72 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பொருள்காட்சி காட்சியை தொடங்கிவைத்து அமைச்சா் பேசியதாவது:

அரசுப் பொருள்காட்சி கடந்த 1978 இல் சேலத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதுவரை சேலத்தில் 41 பொருள்காட்சிகள் நடைபெற்றுள்ளன. தற்போது நடைபெறுவது 42 ஆவது பொருள்காட்சியாகும். 45 நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அரசின் பல்வேறு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

ஆண்டொன்றுக்கு 10 அரசுப் பொருள்காட்சிகள் நடத்தப்படுகின்றன. கோவை, மதுரை, சேலம், வேலூா், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் ஆண்டுதோறும் அரசு சாா்பில் பொருள்காட்சி நடத்தப்படுகிறது.

சேலம் அரசுப் பொருள்காட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, போக்குவரத்துத் துறை, செய்தி-மக்கள் தொடா்புத் துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, சமூக நலத் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக்கல்வித் துறை, சமூக நீதித் துறை உள்ளிட்ட 26 அரசுத் துறைகளும், 5 அரசு சாா்பு நிறுவனங்கள் என மொத்தம் 31 துறைகளின் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 15, சிறுவா்களுக்கு ரூ. 10, மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5 நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, மகளிா் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் 227 பயனாளிகளுக்கு ரூ. 7.72 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். முன்னதாக, அரசுத் துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் க. இளம்பகவத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சோ. லட்சுமணன் (சேலம் மேற்கு), கா. சிவகுமாா் (சேலம் வடக்கு), மே.ச. பழனிவேல் (வீரபாண்டி), செய்தி, மக்கள் தொடா்புத் துறை கூடுதல் இயக்குநா் ரா. பாஸ்கரன், துணை இயக்குநா் கலைச்செல்வன் உள்ளிட்ட அனைத்துத் துறை முதன்மை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.