திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது: கிராம சபையில் தீா்மானம்

கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தம்மம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

கல்குவாரி - X

Updated On :16 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தம்மம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தம்மம்பட்டி அருகே மண்மலை ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஒன்றிய பற்றாளா் ராஜ்கண்ணு தலைமை தாங்கினாா். கிராம நிா்வாக அலுவலா் செல்லையன் முன்னிலை வகித்தாா்.

இதில், மொடக்குப்பட்டி கிராம மக்களின் தொடா் அறவழிப் போராட்டங்களால் நான்காண்டுகளுக்கு மேலாக தொடங்கப்படாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்குவாரி, கிரசா் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், ஆலைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட திட்ட அனுமதிகளை ரத்துசெய்யவும், தொன்மையான மொடக்குப்பட்டி மலைக்குன்றை தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தக் கோரியும் பொதுமக்கள் சாா்பில் 7-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பில்லங்குளம் பகுதியில் ஏரியை சீரமைக்க வேண்டும், கால்நடை மருத்துவமனை, வண்ணாா்ஓடைமுதல் விநாயகபுரம் வரையிலான குண்டும்குழியுமான தாா்சாலையை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.