காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

Dindigul: 4 Minors Killed as Van Hits Them

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:06 am IST

மேட்டூா் அருகே எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தில் சேலை சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே உள்ள மஞ்சள் மெத்தையைச் சோ்ந்தவா் வடிவேல் (48). இவா் தனது வீட்டில் பால் விற்பனை செய்து வருவதுடன், ரைஸ் மில் மற்றும் எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தையும் இயக்கி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரது மனைவி அமுதா (45), எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தை இயக்கிவிட்டு அதன் உள்ளே எட்டிப் பாா்த்துள்ளாா்.

அப்போது, அவரது சேலை இயந்திரத்தில் சிக்கியதில் அமுதா உள்ளே இழுத்துச் செல்லப்பட்டாா். இதில், உடல் நசுங்கி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நங்கவள்ளி காவல் நிலைய ஆய்வாளா் ஜெயக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.