சங்ககிரி பகுதியில் ரூ. 50.40 லட்சத்தில் தாா்சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50.40 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தாா்சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த சங்ககிரி எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன்.
தாா்சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த சங்ககிரி எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன்.
Updated on

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50.40 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 24.50 லட்சத்தில் இருகாலூா் ஊராட்சிக்குள்பட்ட பண்ணகிணத்தூா் முதல் செட்டித்தோட்டம் வரையிலும், ரூ. 18 லட்சத்தில் கோட்டவரதம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆவரங்கம்பாளையம் ரயில்வே பாலம் முதல் பாறைவளவு சாலைவரையிலும், ரூ. 7.90 லட்சத்தில் ஐவேலி ஊராட்சி சென்றாயக்கவுண்டனூா் சாலைமுதல் தோப்புக்காடு சாலைவரையிலும் தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

இதில், அதிமுக சேலம் புகா் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஏ.பி.சிவக்குமாரன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளா் சரவணன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளா் கருப்பசாமி, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com