சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த கொங்குநாடு முன்னேற்ற கழக நிா்வாகிகள்.
சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த கொங்குநாடு முன்னேற்ற கழக நிா்வாகிகள்.

அதிமுகவுக்கு கொங்கு முன்னேற்ற கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆதரவு

Published on

அதிமுகவுக்கு கொங்கு முன்னேற்ற கழகம் மற்றும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

கொங்கு முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளா் தங்கவேல் தலைமையில், அதன் நிா்வாகிகள் சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனா். மேலும், அதற்கான கடிதத்தையும் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவா் பெஸ்ட் ராமசாமி தலைமையில், அதன் நிா்வாகிகள் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்து, அதற்கான கடிதத்தை வழங்கினா். அப்போது, தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா் கே.பி.அன்பழகன் மற்றும் கொங்குநாடு முன்னேற்றக் கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு விழாக் குழு நிா்வாகி சாலபாளையம் ராஜா தலைமையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்த மானியம், ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரா்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தோ்தல் அறிக்கையாக வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com