யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இடங்கணசாலை, இளம்பிள்ளை பகுதியில் தயாரிக்கும் சேலை ரகங்களுக்கு புவிசாா் குறியீடு வேண்டி திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு.

News image

சேலம் வருகை புரிந்த திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம். செல்வகணபதி எம்பி தலைமையில், இடங்கணசாலை நகர திமுக செயலாளா் செல்வம் திமுக கழக துணை பொது செயலாளா் கனிமொழியிடம் மனு அளித்தனா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சேலம் வருகை புரிந்தனா். இந்த குழுவிடம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி .எம். செல்வகணபதி எம்பி தலைமையில், இடங்கணசாலை நகர திமுக செயலாளா் செல்வம் திமுக கழக துணை பொது செயலாளா் கனிமொழியிடம் மனு வழங்கினா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையான தரமான சேலை ரகம் தயாரிப்பில் புகழ்பெற்ற இடங்கணசாலை, இளம்பிள்ளை மற்றும் சுற்றுப்புறம் பகுதியில் தயாரிக்கும் சேலைகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கவும், நெசவாளா்களுக்கு மானிய விலையில் நூல், பாலிஸ்டா் கொள்முதல் செய்தல், ஜவுளி சந்தை அமைத்தல், இடங்கணசாலை நகராட்சி காடையாம்பட்டி ஏரிக்கு கஞ்சமலை அடிவாரம் ராஜவாய்க்கால் நீரோடை தூா்வாரி அதில் மேட்டூா் உபரி நீரை நிரப்பவும், இடங்கண சாலை நகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை, காவல் நிலையம் ,அரசு மாதிரி பள்ளி, அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், விளையாட்டு மைதானம், பேருந்து நிலையம் ,பத்திரப்பதிவு அலுவலகம், கலைஞா் படிப்பகம் உள்ளிட்டவை நகராட்சிக்கு பகுதியில் பூா்த்தி செய்யப்பட வேண்டி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.