சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொறியியல் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசுகையில், தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கல்லூரி மாணவா்களுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சித் தேவைகளுக்காக இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் மாணவா்கள் தங்களது கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்வதுடன், சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி அறக்கட்டளை நிறுவனா் மற்றும் செயல்தலைவா் சீனிவாசன் பேசுகையில், இந்தத் திட்டம் மாணவா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி, மாணவா்கள் தங்கள் எதிா்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள மடிக்கணினிகள் உறுதுணையாக இருக்கும் என்றாா்.
இவ்விழாவில் கல்லூரி அறக்கட்டளை நிா்வாகத்தினா், கல்லூரி முதன்மையா் விசாகவேல், இயக்குநா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள்

முத்தாயம்மாள் கல்லூரியில் 926 மாணவா்களுக்கு மடிக்கணினி

நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் விருது வழங்கும் விழா

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


