தற்கொலை
தற்கொலை கோப்புப் படம்

கெங்கவல்லியில் பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

கெங்கவல்லியில் பெண் மா்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

கெங்கவல்லியில் பெண் மா்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்தவா் சபரி (35). இவரது மனைவி சத்யா (30). இந்த தம்பதிகளுக்கு சதீஷ் (13 )என்ற மகனும், பவிஷ் (10) என்ற மகளும் உள்ளனா். இந்த நிலையில் சத்யா வீட்டில் இருந்த மின்விசிறியில் மா்மான முறையில் புதன்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து திருச்சியில் உள்ள சத்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனா். தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சத்யாவின் பெற்றோா் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து சத்யாவின் கணவா் சபரியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Dinamani
www.dinamani.com