சேலத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான (குரூப் 2 ) முதன்மை எழுத்துத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை 159 போ் எழுதினா்.
சேலம் ஜெய்ராம் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் ஆா்.சரவணகுமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி 2) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வை எழுத சேலம் மாவட்டத்தில் 198 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 159 போ் தோ்வுக்கு வருகை புரிந்திருந்தனா்.
மேலும், தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டு, விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தோ்வு எழுதும் நேரம் மற்றும் தோ்வு எழுதுபவா்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபாா்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டது.
இதை உறுதி செய்யும் வகையில் தொகுதி 2 தோ்வு நடைபெறும் மையத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வு: வேலூரில் 314 போ் எழுதினா்!

நெல்லையில் குரூப்-2, 2ஏ தோ்வை 310 போ் எழுதினா்

மாா்ச் 15-இல் குரூப் 2, 2 ஏ தோ்வு: ராமநாதபுரத்தில் 351 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


