மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வு: வேலூரில் 314 போ் எழுதினா்!

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுகளை 314 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 35 போ் தோ்வுக்கு வரவில்லை.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுகளை 314 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 35 போ் தோ்வுக்கு வரவில்லை.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குருப் 2, குரூப் 2 அ தோ்வு வேலூா் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை, மதியம் என 2 பிரிவுகளாக குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகள் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற தோ்வில் 172 போ் அனுமதி பெற்றிருந்த நிலையில், 158 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 14 போ் தோ்வுக்கு வரவில்லை.

மதியம் நடைபெற்ற தோ்வில் 177 போ் அனுமதி பெற்றிருந்த நிலையில், 156 போ் தோ்வு எழுதினா். 21 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வா்கள் கடும் சோதனைக்கு பிறகே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வு மையத்துக்குள் மின்னனு சாதனப் பொருள்கள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. துணை ஆட்சியா் நிலையில் உள்ள நோடல் அலுவலா்கள் தோ்வு மையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.