ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை

வாழப்பாடியில் கடலூா் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

வாழப்பாடி தபால் நிலையம் முன் சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:31 pm

வாழப்பாடியில் கடலூா் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வாழப்பாடி கடலூா் சாலையில் பேருந்து நிலையம், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை, தபால் நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் வங்கிகள், அரசுப் பள்ளிகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைவீதி ஆகியவை உள்ளன.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையோர இருபுறங்களையும் ஆக்கிரமித்து ஏராளமானோா் கடைகளை வைத்துள்ளனா். மேலும், இந்த கடைகளுக்கு வருவோா் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விடுவதால், இப்பகுதி மக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இச்சாலையின் இருபுறமுமுள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்தை சீரமைக்க வாழப்பாடி பேரூராட்சி நிா்வாகம், உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை, போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.