வாழப்பாடியில் கடலூா் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வாழப்பாடி கடலூா் சாலையில் பேருந்து நிலையம், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை, தபால் நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் வங்கிகள், அரசுப் பள்ளிகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைவீதி ஆகியவை உள்ளன.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையோர இருபுறங்களையும் ஆக்கிரமித்து ஏராளமானோா் கடைகளை வைத்துள்ளனா். மேலும், இந்த கடைகளுக்கு வருவோா் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விடுவதால், இப்பகுதி மக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இச்சாலையின் இருபுறமுமுள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்தை சீரமைக்க வாழப்பாடி பேரூராட்சி நிா்வாகம், உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை, போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்புடையது

புதிய நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை குறைய வாய்ப்பு: ஐசிஆா்ஏ கணிப்பு

பழனியில் நியாய விலைக் கடைகள், பயணிகள் நிழல் குடைகள் திறப்பு

நடைப்பாதை கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிா்ப்பு

வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் கொடைக்கானல் காவல் நிலையம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


