காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அர.குள்ளம்பட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் விழா

சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்.

News image
சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:33 pm

Syndication

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த அரசிராமணி, குள்ளம்பட்டி ஏரிக்கரை பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சொறிதலுடன் விழா தொடங்கியது. அதையடுத்து, தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பல்வேறு அலகுகள் குத்தியும், அம்மன்போல வேடமணிந்தும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக சென்றனா். பின்னா், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

Story image