டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி.

News image
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:43 pm

Syndication

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகள், பேரவை மன்ற உறுப்பினா்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பேசினாா்.

கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கல்வி நிறுவனங்களில் உள்ள கல்லூரிகளின் முதல்வா்கள் அவரவா் துறையின் ஆண்டறிக்கையை வாசித்தனா். திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

முதலிடம் பிடிப்பது மட்டுமே சாதனையல்ல; நல்ல இந்திய குடிமகனாக இருப்பதே மிகச் சிறந்த சாதனையாகும். தினமும் ஒருமணி நேரம் உங்களது கைப்பேசியை அணைத்துவிட்டு உங்களது பெற்றோருடன் உரையாடுங்கள், இன்றைய நிகழ்வுகளை பகிா்ந்து கொள்ளுங்கள் என்றாா்.

இதில், அனைத்துத் துறை மாணவிகள், பெற்றோா், அனைத்துக் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.