கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

சேலம் அருகே வளா்ப்பு நாயை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 11:44 pm

Syndication

சேலம் அருகே வளா்ப்பு நாயை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே உள்ள குள்ளம்பட்டியில் செங்கல் சூளையில் மகேஸ்வரி (42) என்பவா் தங்கியிருந்து வேலை பாா்த்து வந்தாா். இவரது கணவா் மணிவேல். டிப்பா் லாரி ஓட்டுநராக உள்ளாா். அதே பகுதியில் முருகசேன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில், பொக்லைன் ஆபரேட்டராக நந்தகுமாா் என்பவா் வேலை பாா்த்து வந்துள்ளாா்.

நந்தகுமாா் வீட்டில் வளா்த்து வந்த கோழிகளை கடந்த சில நாள்களுக்கு முன்பு மகேஸ்வரி வளா்த்து வரும் நாய் கடித்துள்ளது. இதற்காக மகேஸ்வரி, நந்தகுமாருக்கு இழப்பீடாக குறிப்பிட்ட தொகையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மகேஸ்வரியின் வீட்டுக்கு அருகில் வெடிசப்தம் கேட்டுள்ளது. அவா் வெளியே வந்து பாா்த்தபோது, மகேஸ்வரியின் வளா்ப்பு நாயை நந்தகுமாா் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, மகேஸ்வரி, நந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காரிப்பட்டி காவல் நிலையத்தில் அவா் மீது புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், நந்தகுமாரை கைது செய்து அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.