மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஒசூா் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

தளி அருகே சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி, நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 8:47 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி, நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தளியை அடுத்த கும்பளாபுரம் ஏரி பகுதியில் தண்ணீா் குடிக்க வரும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை ஜிகூா் கிராமம் அருகே போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில் அவா்கள் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட 3 முயல்கள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் கும்பளாபுரம் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவா்கள் கா்நாடக மாநிலம், அனேக்கல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் (46), விஜயகுமாா் (40) என்பது தெரியவந்தது. தொடா்ந்து இருவரையும் தளி போலீஸாா் கைது செய்து, விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.