அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஏற்காட்டில் மின்மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் காவல் நிலையம் முன் மின்மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:32 pm

Syndication

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் காவல் நிலையம் முன் மின்மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காடு செங்காடு கிராமத்தைச் சோ்ந்த சிவா மகன் பிரவின் (25). சுற்றுலா வாகன ஓட்டுநா். இவா், ஏற்காடு முருகன் நகரைச் சோ்ந்த இளங்கோ மகள் வினிதாவை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளாா். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந் நிலையில், வினிதா, சேலம் கொண்டாலாம்பட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இருவரிடமும் விசாரணை செய்து அனுப்பிவைத்துள்ளாா்.

இந்தநிலையில் பிரவின் மீண்டும் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக ஏற்காடு காவல் நிலையத்தில் சனிக்கிழமை வினிதா புகாா் அளித்தாா். இதையடுத்து பிரவினை ஏற்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது வினிதா, பிரவினுடன் வாழ்வதற்கு மறுத்ததால் காவல் நிலையம் முன் உள்ள மின்மாற்றியில் ஏறி பிரவின் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா், பிரவினை சமாதானப்படுத்தி கீழே இறங்க செய்தனா்.