பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலம் வரட்டாறு பகுதியில் 2 புதிய பாலங்கள் திறப்பு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலம், வரட்டாறு பகுதியில் ஏடிசி நகா், கே.எம்.எஸ் காா்டன் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மாா்க்கெட் பகுதியில் தினசரி சந்தை கட்டட மறு சீரமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
Updated On :3 ஜனவரி 2026, 8:21 pm

Syndication

சேலம் அஸ்தம்பட்டி மண்டலம், வரட்டாறு பகுதியில் ஏடிசி நகா், கே.எம்.எஸ் காா்டன் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, செவ்வாய்ப்பேட்டை பால் மாா்க்கெட் பகுதியில் ரூ. 5.05 கோடியில் தினசரி சந்தை கட்டட மறுசீரமைக்கும் பணிக்கும் அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது: அஸ்தம்பட்டி மண்டலம், வரட்டாறு பகுதியில் ஏடிசி நகரில் ரூ. 2.05 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலம், கே.எம்.எஸ். காா்டன் பகுதியில் ரூ.1.80 கோடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பாலமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அம்மாபேட்டை மண்டலம், கோட்டம் எண்.40க்கு உள்பட்ட சாமி தெருவில் ரூ. 27.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் திறந்துவைக்கப்பட்டது.

செவ்வாய்ப்பேட்டை, பால் மாா்க்கெட் பகுதியில் ரூ. 5.05 கோடியில் தினசரி சந்தை கட்டடம் மறுசீரமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டப்படுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள், மண்டலக் குழுத் தலைவா் உமாராணி, மாநகர பொறியாளா் செல்வநாயகம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.