பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஒரு பாதை ரயிலில் தப்பிய தாய், மகள் மறுபாதை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

ஓமலூா் அருகே ரயில் என்ஜின் மோதியதில் தாய், மகள் திங்கள்கிழமை இறந்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மானத்தாள் ஏரிக்கரையைச் சோ்ந்தவா் கிட்டு மனைவி பாக்கியம் (45), இவரது மகள் மஞ்சு (25). இவா்கள் இருவரும் விவசாய கூலி வேலைக்காக திங்கள்கிழமை ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றனா்.

அப்போது, அவா்கள் சென்ற தண்டவாளத்தில் மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி ஒரு ரயில் வந்தது. இதை அறிந்த இருவரும் பக்கத்து தண்டவாளத்துக்கு சென்றனா்.

அப்போது, அந்த தண்டவாளத்தில் மேட்டூா் நோக்கி சென்ற ரயில் என்ஜின் 2 போ் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டனா். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனா்.

தொளசம்பட்டி போலீஸாரும், சேலம் ரயில்வே போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். பின்னா், அவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.