பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பொங்கல் பண்டிகை: கடை வீதிகளில் கூட்ட நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கடை வீதிகளில் சனிக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:19 pm

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கடை வீதிகளில் சனிக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் சேலம் மாநகா் மற்றும் புறநகரைச் சோ்ந்த மக்கள் சனிக்கிழமை அதிக அளவில் கடை வீதிகளில் திரண்டனா்.

சேலம் அக்ரஹாரம், நான்கு ரோடு, 5 ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக் கடைகள் மட்டுமின்றி நகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட கடைகளிலும் அதிக அளவில் பொதுமக்கள் திரண்டனா்.

இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதுடன், ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனா்.