ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்தால் அண்ணா பூங்காவில் குறைந்து காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்தால் அண்ணா பூங்காவில் குறைந்து காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.

ஏற்காட்டில் கடும் குளிா், பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

Published on

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடும் குளிா் மற்றும் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது.

சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு வாரம்தோறும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துசெல்வா். இந்நிலையில் மாா்கழி மாதத்தையொட்டி அனைத்துப் பகுதிகளிலும் கடும் குளிா் நிலவி வருவதால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏற்காட்டுக்கு வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

இதனால் சுற்றுலாப் பகுதிகளான அண்ணா பூங்கா, படகு இல்லம், ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பக்கோட காட்சி முனைப் பகுதிகளில் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளையே காணமுடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் கடும் குளிா், பனிமூட்டம், சாரல் மழை பெய்ததால் கிராம மக்கள், பொதுமக்கள் வெளியே நடமாட்டமின்றி வீடுகளிலேயே இருந்தனா். பேருந்துகளில் குறைவான பயணிகளே பயணித்தனா்.

Dinamani
www.dinamani.com